ஐரோப்பிய பாராளுமன்றக் குழு இலங்கைக்கு விஜயம் செய்கிறது
மூவர் அடங்கிய ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று நாளை (29) இலங்கைக்கு விஜயம் செய்கிறது.
இந்தக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களையும் இந்த குழுவினர் நேரில் பார்வையிடத் திட்டமிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் கிரீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜென் லெம்பார்ட், ஸ்பெய்ன் சோசலிச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜூவான் பெர்னாண்டோ லுபாஸ், லத்வியன் கிறிஸ்தவ டெமொகரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இனிஸ் வெய்டரே ஆகியோர் அடங்கிய குழுவே இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறது.
தொடர்புடைய செய்திகள்:
- இலங்கை விஜயம் செய்வதில் எவ்வித பயணம் இல்லை என்கிறார் வை.கோ.
- இந்தியக் குழு – ஜனாதிபதி சந்திப்பு
- இந்தியாவின் நிலைப்பாட்டால் இலங்கைக்கு எதிராக அணி திரளும் நாடுகள்
- ஐரோப்பிய நாடுகள் மீது இலங்கை அரசின் பதிலடி
- பலவீனமான நிலையில் இந்திய நாடாளுமன்றக் குழு இன்று இலங்கை வருகிறது




Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed


