வெளிநாட்டவரைக் கடத்திய மூவர் கைதுசெய்யப்பட்டனர்


பணத்திற்காக வெளிநாட்டவரைக் கடத்திச் சென்ற கும்பலொன்றை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மூவர் அடங்கிய கும்பலொன்று வெளிநாட்டவரை கொழும்பு – கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து பணத்திற்காகக் கடத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் துரிதமாக செயற்பட்டதாகவும், கடத்திச் சென்ற வெளிநாட்டவரை நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து மீட்டதாகவும் கடத்தலில் ஈடுபட்ட மேலும் மூவரை இதன்போது பொலிஸார் கைதுசெய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்:

  1. வர்த்தகரைக் கடத்தி பத்து இலட்சம் கப்பம் கோரியோர் கைது
  2. ஹாஷீஸ் போதைப் பொருள் கடத்திய பிரித்தானிய பிரஜைக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் உத்தரவு
  3. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கஞ்சா கடத்திய நபர் கைது
  4. கொழும்பில் இரு முஸ்லிம்கள் கடத்தல்
  5. மின்னல் தாக்கி மூவர் மரணம் செய்திகள்

Comments are closed.